பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டினியல்பு. உஎ கிடப்பவும், இதன் கருத்துப்பொருள் இசவாதல் அறியமாட் டாத நச்சினார்க்கினியர், செய்யுளில் இடையற்று ஒழுகும் பொருள் ஒழுக்கம் அறிந்து உரை எழுதாமல், ஓர் அடியில் ஒரு சொல்லையும் தொலையிற் கிடக்கும் வேறோர் அடியில் வேறொரு சொல்லையும் தமக்குத் தோன்றியவா றெல்லாம் எடுத்து இணைத்துத் தாமோர் உரை உரைக்கின்றார். நச்சி னார்க்கினியர்க்குமுன் னேயிருந்த நக்க்பர், இளம்பூரணர், பே ராசிரியர், சேனாவரையர் முதலான உரையாசிரியன் மாராதல், அவர்க்குப்பின்னே யிருந்த பரி.ேலழகியார், அடியார்க்கு நல் லார், சிவஞான (யோகிக். முதலியோ ராதல் இவ்வாறு செய் யுட்களைக் கண்டவாறெல்லாம் அலைத்து உரை எழுதக் கண்டி லம். மேலும், நச்சினார்க்கினியர் இங்ஙனஞ் செய்யுட்களை அலைத்து நலிந்து பொருள் சொல்லு முறையை ஆசிரியர் சிவஞான யோகிகள் தாம் இயற்றிய தொல்காப்பியச் சூத் தி விருத்தியில் ஆங்காங்கு மறுத்தருளியவாறுங் காண்க. அகன்று கிடக்குஞ் செய்யுட்பொருளை அணுக்கவைத்துப் பொருத்திச் சொல்வதே தொல்காப்பியனார் கூறிய 'மாட்டு' என்னும் உறுப்பாவதன்றி, செய்யுள் ஒரு பக்கமும் உரை ஒரு பக்கமுமாகவைத்து உரைப்பது அன்றாம் என்பது கடைப் பிடிக்க. அன்றன் று, நச்சினார்க்கினியர் உரைக்கும் உரைப் பொருள் சிறந்ததாகலின், அவர் அவ்வாறு செய்யுட்களை அலைத்துப் பொருள்கூறு தல் குற்றமாகாதெனின்; நன்று சொன்னாய், அவர் எவ்வளவு தான் சிறந்த உரை உரைப்பி னும் அது செய்யுட்பொருளைக் கௌவிக்கொண்டு செல் லாமல் வேறுபடுமாயின் அது கொள்ளற்பால தன்று என மறுக்க. செய்யுளுக்கு இசைய உரையெழுதல் வேண்டுமே யன்றி, உரைக்கு ஏற்பச் செய்யுளை அலைத்து மாற்றல்வேண்டும் மென்றல் முடிக்குத் தக்க தலை செய்துகொள்வோம்' என்பார் சொற்போல நகையாடுவதற்கே ஏதுவாமென்றொழிக. அற் றன்று, செய்யுளியற்றிய புலவரே ஓர் ஒழுங்குமின்றி அவ் வாறு சொற்களையும் பொருள்களையும் சிதறவைத்துப்பாடினா