62
பனிமுல்லைச் சூட்டு வேய்ந்தார்." - எனச் சிந்தாமணி கூற, முல்லைச் சூட்டைக் கற்பிற்குத் தலையிலே சூட்டினர் ' என்று நச்சிளுர்க்கினியர் விளக்கினர். இம்முடிச்சூட்டைப் பெண் கடவுளர்க்கும் ஏற்றிப் பாடினர். காளியைப் பாடும் ஒட்டக்கூத்தர்,
28 'திருவடியில் அணிந்திருக்கும் அணியை நூபுரங் கள் என்னலாமோ? அவை திருமறைகள் அல்லவோ! முடி யில் குடியிருப்பது முல்லையோ? அது மேம்பட்ட கற்பு அன் ருே!” - என முல்லைச் சூட்டைக் கற்பாக்கி நயத்துடன் வண்ணித்தார்.
தமிழ் நாட்டில் கன்னிப் பெண்களுக்கெனச் சில மரபு கள் இருந்தன. அவற்றுள் ஒன்று முல்லேக்கொடி வளர்த்தல். இதனே,
? “ எற்றே கொடிமுல்லை தன்னை வளர்த்தெடுத்த
முற்றிழையாள் வாட முறுவலிக்கும்” - என்பது கொண்டு உணரலாம். இக்கொடி வளர்ப்பையும் பெண் கடவுளர்க்கு ஏற்றிப் பாடினர் ஒட்டக்கூத்தர். ' தேவி கொற்றவை கைவிடாது வளர்த்த முல்லேக்கொடி நூருயிரம் கிளேவிட்டுத் தழைத்ததாம். இக்கருத்தை விளக்கிய .பழைய உரை ஒன்று,
' தேவி முல்லை வளர்த்தற்குக் காரணம் கற்புடைமை என உணர்க' - என்கின்றது. இத்துடன் காளி குமரி என்பதையும் கூட்டி உணர வேண்டும்.
28 அடிச்சூட்டு நூபுர மோ? ஆரணங்கள் அனைத்துமே முடிச்சூட்டு முல்லையோ? முதற்கற்பு முல்லையோ'
- தக்கயாகப்பரணி : 119. -2 தண்டியலங்கார உரை மேற்கோள் வெண்பா. 30 துதிக்கோடு கூர்கலை உகைப்பாள் விடாமுல்லை
துருயிரங் கிளைகொடு ஏறும் ”
- தக்கயாகப்பரணி : 75