பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EF!

மக்களுக்கு இனிக்கும் வகையில் அளிக்க வேண்டுமென்ற நோக்குடன் முதற்கண் கலித்தொகை நூலை எளிய நடையில் வடித்துத் தந்தவர் .ெ ப. ரு ம் பு ல வ ர் கா. கோவிந்தன் எம். ஏ. அவர்கள். சங்க கால அரசர், புலவர் வரலாற்றைத் திறம்படப் படைத்த புலவர் அவர்கள் கால்டுவெல் பெருமகனாரின் திராவிட மொழி களின் ஒப்பி ல க்க ண த் ைத யும் பி. டி. சீனிவாச அய்யங்காரின் தமிழர் வரலாற்றையும் தமிழில் தந்து தமிழன்பர்களுக்குப் பெருந் தொண்டாற்றியுள்ளார்கள்.

தற்போது பத்துப்பாட்டு நூல்களுக்கு விளக்கம் எழுத்த தொடங்கி முதற்கண் முல்லைப்பாட்டின் விளக்கத்தினை முல்லை என்ற இந்த நூலில் தந்துள்ளார்: படிப்போர் பயன் பெற மூலமும் நூலில் சேர்க்கப்பட்டுள்ள்து. - -

தமிழ் மக்கள் வாங்கிப் படிந்துப் பயன் பெறுவார் களென நம்புகிறோம்;

-சைவசததாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.