பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


5

ராவுத்தர்


பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் எழுந்து, பதினொன்றாம் நூற்றாண்டில் பரந்துவிரிந்த, சோழப் பேரரசின் நெருக்கம் காரணமாக தென்னகத்திற்கும் அராபிய நாடுகளுக்குமிடையே நிகழ்ந்த பண்டமாற்று அதுவரை இல்லாத அளவிற்கு விறுவிறுப்பை எட்டியது. அராபிய பாரசீக நாட்டுக் குதிரைகள் அதில் பிரதான இறக்குமதியாக இருந்தது. கடைச்சங்க நூலான பட்டினப்பாலை, "நீரின் வந்த நிமிர் பரிப்புரவி" நிறைந்த பூம்புகார் துறையைச் சித்தரிக்கிறது.[1]

“விழுமிய நாவாய் பெரு நீரோச்சுநர்
     நனைந்தவை தேஎத்து நன்கலனுய்ம்மார்
புணர்ந்துடன் கொணர்ந்த புரவியோ டனைத்தும்
     வைகறொறும் வழி வழி சிறப்பு ... ...”

என்று மதுரை காஞ்சி, புரவிகள் வந்த வழியை சிறப்பித்து சொல்கிறது.”[2]

“தறுகண் ஆண்மைய, தாமரை நிறத்தன, தகை சால்
     மறுவில்லான் குளம் புடையவன் ... ...”

என்றும்,

“பீள மா மயிலெருத் தன்னப் பெருவனப்புடையன
மாலை மா ராட்டத் தகத்தன வளரிளங் கிளியே
போது மேனிய ... .... ....”

[3]


  1. உருத்திரங்கண்ணனார் - பட்டினப்பாலை
  2. மதுரைக்காஞ்சி - பாடல் எண். 8-16 28
  3. திருத்தக்க தேவர்-சீவகசிந்தாமணி (மணமகள் சிலம்பகம்) பாடல் எண் 158.6