பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி.பா. 107

அன்புக்காக விட்டுக்கொடுத்து இணங்கிந.; உரிமைக் காகப் போராடிக் காலங் கழிக்காதே.

(தங்கைக்கு : 39)

  • தமிழர்கள் நல்லவர்களாக மட்டும் இருந்து தனித் தனியாகவும் குடும்பம் குடும்பமாகவும் நாடு நாடாகவும் இருந்து அழிந்தது போதும். இனிமேல் வல்லவர்களாகவும் வாழக் கற்றுக்கொளளவேண்டும்.

(தம்பிக்கு : 6)

  • கொஞ்சம் போராட வேண்டும். பிறகு விட்டுக் கொடுக்க வேண்டும். அப்படி நடந்தால்தான் ஆண் களைத் திருத்த முடியும். அளவுக்குமேல் போராடவும் கூடாது. அளவுக்குமேல் விட்டுக்கொடுக்கவும் கூடாது. எதிலும் அளவு வேண்டும்; அளவு தெரிந்துகொண்டு நடந்தால் வாழ்க்கை துன்பம் இல்லாமல் போய் விடும்.

(நெஞ்சில் ஒரு முள், பக். 231-232)

கணவனோடு வாழும் ஒருத்திக்குக் கணவனுடைய அன்பே முதன்மையானது; மக்கள் இரண்டாம் நிலையினர்; கணவன் பெற்றோரும் தன் பெற்றோரும் மூன்றாம் நிலையினர்; நண்பரும் உறவினரும் நான்காம் நிலையினர்; புகழும் மதிப்பும் ஐந்தாம் நிலையின; கலையும் பொழுதுபோக்கும் ஆறாம் நிலையின; தெருவாரும் ஊராரும் ஏழாம் நிலையினர். இப்படியே மற்றவற்றையும் மற்றவர்களையும் முறைப்படுத்தி வைத்துக்கொள்.

(தங்கைக்கு : பக். 74)