பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

உண்டான். அந்தப் பாராட்டுதலைக் கேட்ட மனைவி பின் முகம் மகிழ்ச்சியுற்றது அகத்தே நிறைந்த மகிழ்ச்சி புறத்தே நுட்பமாகப்புன் முறுவலாக விளங்கியது.”

இந்தப் பாடலை நம் கண்முன் கொண்டுவரும் டாக்டர் மு. வ. அவர்கள் விளக்கத்திற்குக் கையாளும் உத்திகள் இளைஞர் உலகம் இனிது கற்றுத் தெளிய வேண்டிய ஒள்றாகும். மேலும் பகுதி வருமாறு:

.திருமணத்திற்கு முன் இந்த இளைஞனுக்குக் தன் விருப்பு வெறுப்பே முன்னோங்கியிருந்தன. அதனால்தான் தாயின் அன்பு கலந்த உணவையும் மகிழ்ந்து போற்ற முடியாத மகனாக இருத்தான் தாயின் அன்புக்கும் இல்லாத ஆற்றல், காதலுக்கு அமைந்திருத்தல் வியப்ப்ே ஆகும். தாயின் அன்பு ஏற்படுத்த முடியாத பெருமாறுதலை ஒருத்தியின் காதல் அவன் உள்ளத்தில் ஏற்படுத்திவிட்டது. தான் விருப்பு வெறுப்பை முன்னோங்க விடாமல் தன் காதலியின் மகிழ்ச்சியையே பெரிதாகப் போற்றும் மனம் அமைந்துவிட்டது. ஆதலின் போற்றத்தக்க சுவை அமையாத உணவையும் இனிது எனப் போற்றி

உண்டான்.

“விருப்பு வெறுப்பு முன்னோங்குவதற்குக் காரணம் உள்ளத்தே குடிகொள்ளும் தன்னலமேயாகும். கா தல் குடிபுகுந்த பின் அங்குத் தன்னலத்தின் ஆட்சி செல்வதில்லை. தன்னலத்தின் விளைவாக தன் விருப்பு வெறுப்பு மேல் எழுதல் இல்லை. பிறர் விரும்பு மாறு சொல்லுதலும் செய்தலுமே இயல்பாக அமைந்துவிடுகின்றன. அதனால் இனிமை குறைந்த