பக்கம்:மூட்டம்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெல்லை மாவட்டம், திம்மணம்பட்டியில் பிறந்த சு.சமுத்திரம் முற்போக்கு இலக்கிய உலகம் மதிக்கும் சிறந்த நாவலாசிரியர் நல்ல சிறுகதை எழுத்தாளர். - வேரில் பழுத்த பலா நாவலுக்காக சாகித்ய அகாதமியின் பரிசு பெற்ற இவர் மத்திய அரசின் செய்தித்துறையில் உயர் அதிகாரியாக விளங்குகிறார். மந்திர் - மசூதிப் பிரச்சனையால் அப்பாவிப் பொதுமக்கள் சமூக விரோதிகளின் கையில் சிக்கிச் சின்னாபின்னப்படுத்தப்பட்ட பின்னணியில் எழுதப்பட்ட நாவல் இந்த-மூட்டம். - காவிச்சட்டைக்காரர்களின் கலவரத்தாலும் காக்கிக் சட்டைக்காரர்களின் கண் ணிர்ப் புகைத் தாக்குதலாலும் பாதிக்கப்படும் ஒரு குக்கிராமத்தின் அவல நிலையை அற்புதமான நடையில் நெஞ்சைத் தொடும் விதத்தில் சித்திரிப்பதோடு இந்துவாகவோ முஸ்லீமாகவோ அல்லாமல் ஒவ்வொருவரும் இந்தியராக வாழ வேண்டும், மாற வேண்டும் என்ற சிந்தனையை நம்முன் வைக்கிறார் சு. சமுத்திரம். செம்மலரில் தொடராக வெளிவந்தது, இந்த மூட்டம். - கவிஞர் மீரா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/147&oldid=882363" இலிருந்து மீள்விக்கப்பட்டது