பக்கம்:மூட்டம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

다. கசமுத்திரம் فستیوع / 36 பழனிவேல், தன் கோபத்தை, குனிஞ்சு வாங்கேன்டா, என்று தபால்காரனிடம் காட்டினார். அந்த இளைஞனுக்கு வாங்க விருப்பமில்லை...ஆனால் வாங்கித்தான் ஆகனும்.மறுத்தால் நான் கொடுத்து நீ வாங்க மாட்டியா...' என்று அடித்தாலும் அடிப்பார்.போலீசுக்குப் போனால், பெரிய மனுஷ்னை அடிக்க வச்சுட்டியே என்று, அவங்க்ளும் ரெண்டு சாத்து சாத்தல்ாம். தபால் இளைஞன் போனதும் பழனிவேல் குதியாய்க் குதித்தார். அபிராமி பில்டிங்கில், பத்தி பத்தியாய் கட்டி இருக்கேன் பாருங்க...கடையிங்க...அதுல கடைசி 35 ώύΥ !..- ΙΕΑ தெரியாத்தனமாய், காதர் ப்ர்ட்சா என்கிற சாய்பு பயலுக்கு விட்டேன்." . . -* t * 'முஸ்லீமா இருந்தாலும் குல்லா போடமாட்டானே... உருட்டுக்கட்டை மாதிரி..அவன்தானே. அந்தப் பயலேதான்.மற்ற கடைக்கு வாடகை ஏத்துனது மாதிரி அவனுக்கும் ஏத்தினேன்...இவன் என்னடான்னா, அவங்கிட்ட போயி யாருமே அதிக வாடகை கொடுக்கக் கூடாதுன்னு சொல்லி இருக்கான். அவனுக கேட்கல. எல்ல்ோரும் வாடகையக் கூட்டிக் கொடுத்தப்போ...இந்தப் பய பழைய வாடகையை கொடுத்தான்...நான் திருப்பிக் கொடுத்திட்டேன்...இவன் என்னடான்னா எனக்கு அந்த பணத்தை இப்படி மணியார்டர் அனுப்புறான்...அந்த பில்டிங்ல வருசக் கணக்கில் இருக்கிற நம்ம பயலுக சும்மா இருக்கானுங்க... ஆறு மாதத்துக்கு முன்னே வந்த காதர் பய என் கண்ணுலயே விரல்விட்டு ஆட்டப்பாக்கான். இதுக்குப் பேர்தான் 'இஸ்லாம் என்கிறது. இதனால் தான் நம்ம தலைவர் சொல்றார்-இது இந்துக்களோடகாலமில்ல... டிசம்பர் ஆறு, அதாவது ந்ேiற்றில் இருந்து இந்துக்களோட் பொற்காலம் துவங்கி இருக்குன்னு சொல்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/38&oldid=882408" இலிருந்து மீள்விக்கப்பட்டது