பக்கம்:மூட்டம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெ.சமுத்திரம் فدائيyع / 51 டாக்டர் முரளியின் முகஉந்துதலுக்கு உட்பட்ட அபிராமி இப்போது சம்சுதீனைப் பார்த்து திருப்பிக் கத்தினாள். 'யு ஷட் அப்.' 4 அவன் அந்தத் திண்ணைக் கடைக்கு முன்னால் சைக்கிளை நிறுத்தினான். வெள்ளை இனாமல் பிடியின் இருபக்கமும் பிடித்திருந்த முடிமுளைத்த இரும்புகள் போன்ற இரண்டு கரங்களையும் எடுத்தான். சைக்கிளிலிருந்து இறங்காமலே முன் பக்கமாய் குவிந்து, பாருக்கு இருபக்கமும் கால்களை அகலப் போட்டான். பின்புறமாகத் திரும்பி கருப்பு ரப்பர் கயிறால் கட்டப்பட்ட வெள்ளை ஈச்சம்பாய் கூடையைத் திரும்பிப் பார்த்தான். அதில், விளையாட்டு அரங்க இருக்கைகள் போல் அடுக்கடுக்காய் வைக்கப்பட்ட பச்சை வெற்றிலைக் கட்டுகளில் கை போட்டான். பின்னர் வெற்றிலைக்காம்பு அடிவாரங்களில் பிசினாய் ஒட்டிய பாசியையோ, தூசியையோ அப்புறப்படுத்திவிட்டு, ஐந்து கவுளி வெற்றிலைக் கட்டுக்களை எடுத்து அவளிடம் நீட்டினான். பிறகு நீட்டிய கைகளைச் சுருக்கி, ஏழைகளின் நரம்புகள் போல் வெளிப்படையாய்த் தெரிந்த வெற்றிலைக் காம்புகளை பிடித்துக் கொண்டு ஒரு உதறு உதறினான். உதறிவிட்டு, அந்தக் கடையின் முன்பக்கம் நீளவாக்கில் பொருத்தப்பட்ட மரப்பலகையில் வெற்றிலைக் கட்டை வைத்துவிட்டு, அவளை ஏறிட்டுப் பார்க்காமலே சைக்கிள் இருக்கையில் ஏறி, பெடல்களை ஒரு அழுத்து அழுத்தியபோது யோவ் மூப்பனார்..." அவன் சைக்கிளை நிறுத்தினான். ஒரு காலை பெடலிலும், மறுகாலைத் தரையிலும் வைத்தபடியே திரும்பிப் பார்த்தான். அவள் தலையையே கையாட்டுவதுபோல ஆட்டினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/53&oldid=882443" இலிருந்து மீள்விக்கப்பட்டது