பக்கம்:மூட்டம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் : قاسمثيyع / 74 அப்போ, இந்த மாதிரி பாட்டு போடுறவனுகள சும்மா விடனும் என்கிறியா. நம்ம பொண்ணுக அந்த அசிங்கமான பாட்டைக் கேட்க முடியாம கூனி, குறுகி காதுகளை பொத்திக்கச் சொல்றியா...' அமீர், திவானுக்குப் பதிலடியாய்ப் பேசினார். 'நாமும் வீரத்தில குறைஞ்சிடல...இப்படி அவனுக பாட்டுப் போடுறாங்கன்னா அதுல ஏதோ ஒரு சதி இருக் குன்னு நினைக்கேன்...இன்னிக்கு காலையிலேயே முன் னணிக்காரங்க அந்தக் கடைக்கு வந்துட்டுப் போனாங் களாம்...அதனால் பொறுத்திருந்து பார்ப்போம்... அவங்க சதி வலையில நாம விழுந்திடக்கூடாது...போலீஸ் எதுக்கு இருக்கு...' அப்போ, கொக்கு தலையில வெண்ணெய் வைக்கச் சொல்றியா!' காதர்பாட்சா, அமீருக்குப் பதிலாக திவானுக்குப் பதில் கொடுத்தான். அப்படி வெண்ணெய் வச்சதே நீங்கதான். பழனிவேலு, இஸ்லாமிய தெருவுல ஒயின்ஷாப் திறக்கிறதுக்கு, சிபாரிசு செய்ததும் நீங்கதான். திவான் முகமது திக்கு முக்காடிய போது, நூருல்லா அதட்டுவது போல் பேசினார். 'போலி விசுவாசிகள் இங்கே நிற்கட்டும். மானமுள்ள முஸ்லிம்க மட்டும் வரட்டும்...எங்கெல்லாம் இஸ்லாமிய விரோத காரியங்கள் நடக்கோ அதுங்கள தீர்த்துக் கட்டணும்...புறப்படுங்க...! அமீர் ஏதோ இடையில் பேசப் போனார். காதர் பாட்சா கூட்டத்தை இடைமறிக்கப் போனான். அதற்குள் இன்னொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/76&oldid=882490" இலிருந்து மீள்விக்கப்பட்டது