பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுந்த இப்படையெடுப்பே வீரத்தின் விளை நிலமான தென் பாண்டித் திரு நாட்டின் மீது வெள்ளையர்கள் துணிந்து மேற்கொண்ட முதல் படையெடுப்பு. திருச்சியை விட்டுப் புறப்பட்ட ஏகாதிபத்தியப்படை மதுரை செல்லும் வழியிலுள்ள மணப்பாறையில் தன்னை எதிர்த்த ஒரு பாளையக்காரனை வாட்டி வதைத்துக் கப்பம் கட்டச் செய்தது. அந்தப் 'புனிதச் செயலில் கான்சாகிபு தன் கைவரிசையைப் பூரணமாகக் காட்டினான். பின்பு கர்னல் ஹீரான் 1755 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் தேதி மதுரை போய்ச் சேர்ந் தான். அவ்வமயம் மதுரையைக் கைப்பற்றியிருந்த மியானா என்பவன் அஞ்சி நடுங்கிக் கோவில் குடிக் கோயிலுக்குள் ஓடி ஒளிந்தான். அவ்வாறே திரு நெல்வேலியில் இருந்த முடேமியா, நபிகான் என்ற இருவரும் திருநெல்வேலி மாவட்டத்து மேற்குப் பாளையங்களின் பெருந்தலைவராகிய பூலித்தேவரிடம் சரண் புகுந்தனர். இராமநாதபுரம் மறவர் நாடு களும் கர்னல் ஹீரான் படையெடுப்புக்குப் பணிக் தன. இப்படி வெற்றிமேல் வெற்றி பெற்ற ஆணவத்தோடு கர்னல் ஹீரான் கோவில் குடிக் கோயிலைத் தாக்கத் துணிந்தான். அந்தத் தாக்கு தலுக்குக் கான் சாகிபையே முன்னோடியாக அனுப் பினான். எமன் போலக் கான்சாகிப் வரும் செய்தி கேட்டுக் கோவில் குடியில் ஒளிந்திருந்த மியானோ தப்பி ஓடிவிட்டான். பகைவன் ஓடி ஒளிந்த நிலையிலும் பிரிட்டிஷ் தளபதியின் பேய் உள்ளத்தில் பொங்கி எழுந்த கோபத்தீ அடங்கவில்லை. கையில்