பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

21 | என அறிந்தான். பற்களை நற நற வென்று கடித்தான். என்ன பயன்? அத்தனை நாளும் பாம்புக்கு அல்லவோ பால் வார்த்தான் கான் சாகிபு! எந்தத் திருவாங்கூர் மன்னனுக்குக் களக் காட்டைக் காட்டிப் பூலித் தேவரையும் அவர் தோழர்களையும் தாக்கச் செய்தானோ அதே திருவாங்கூர் மன்னன் கான்சாகிபு ஆர்க்காட்டு நவாபின் பிடியிலிருந்தும் கும்பினியின் பிடியிலிருந் தும் விடுதலை பெற ஆசை கொண்டிருக்கும் செய்தி யைக் கண்ணும் மூக்கும் வைத்துத் கும்பினியின் காதுகளில் ஓதினான். செய்தி அறிந்த கான்சாகிபு பெரும்படை கொண்டு திருவாங்கூரை மோதப் புறப்பட்டான் ; கும்பினி தடுத்தது. ஆனால் உத்தர வைப் புறக்கணித்துக் கான் சாகிபு போர்க்கோலம் பூண்டான். அவ்வமயம் மார்ச்சந் என்ற பிரெஞ்சுத் தளபதி கான்சாகிபுக்குத் துணையாக வந்து சேர்ந் தான்; அதனை அறிந்து நடுங்கிப் போனான் திருவாங் கூர் மன்னன். கொள்கை குறிக்கோள் எதுவும் இல்லாத அவன் கான் சாகிபு தந்த பரிசுகளைப் பெற்றுக்கொண்டு சமாதானப் பத்திரத்தில் கை யெழுத்திட்டு விட்டு நச்சரவெனத் தன் அரண்மனைக் குள் நுழைந்து கொண்டான். கான்சாகியின் கண்கள் யாரெல்லாம் ஆர்க் காட்டு நவாபின் - கும்பெனியின் பகைவர்கள்?' என்று சுழன்று சுழன்று நாலு திசைகளிலும் பார்த்தன. அவன் படைத்திருந்த சுடுகாடே அவ னைப் பார்த்துச் சிரித்தது; அழைத்தது. கான்சாகி