இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வீரம்
❖
சித்திரையின் மாலைச்
சிறுபொழுதில் வள்ளுவர் பேர்
முத்திரையைப் பெற்றிங்கே
முகிழ்த்துள்ள பேரவையின்
கவியரங்கில், ஏறியென்
கம்பீரக் குரல்காட்டப்
புவியரங்கில் வாடிப்
புலம்பியவன் வந்துள்ளேன்.
என்னே என் வீரம்.....!
எழுச்சிக் கவியிசைக்கும்
முன்னே கரங்கூப்பி
முத்தமிழை வணங்குகிறேன்.
வெண்மதியை வானை
விரிகடலைக் காவிரிக்கும்
பெண்நதியைத் தொழுதுகவிப்
பிச்சைநான் கேட்கின்றேன்.
முடியரசில் ஓங்கி
வளர்ந்த மொழிக்கின்று
குடியரசில் ஏற்பட்ட
குறைகளையப் புறப்பட்ட