பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 17 முடியரசே! விர முரசரசே காரைக் குடியரசே காவியப்பூங் கொடியரசே வணங்குகிறேன். கூரான அரம்போலக் குழந்தைகளின் மதிசிறக்க நேரான வழியிலவர் நெஞ்சிருக்கப் பாடுபட்டு வேராய் விளங்கி விழுதுகளைப் படரவிட்ட நாராயணனாரே' நல்லாரே வணங்குகிறேன். பாட்டாழிக் குள்மூழ்கிப் பளபளக்கும் முத்தளிக்கும் கூட்டாளிக் கவிஞர்களே, குறளாசான் சீடர்களே, பால்கொடுக்கும் சுவையும் பழங்கொடுக்கும் சுவையுமொரு நூல்கொடுக்கும் சுவையாமோ நுகர்தற்கே என்றெண்ணி வந்துள்ள அன்பர்களே! வணங்குகிறேன்; எனக்கிங்கே தந்துள்ள வீரத்தைத் தாங்க முயல்கிறேன்! 于二 கவியரங்கத்தலைவர் - முடியரசன் . 女 விழாத்தலைவர் அரசர் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் இரா. நாராயணன் சேர்வை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/18&oldid=883008" இலிருந்து மீள்விக்கப்பட்டது