பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் 8, 20 கிளிப்பிள்ளை போல்பேசிக் கிறுகிறுக்க வைக்கின்ற மாதர் கழுத்தினிலே மங்கலமாய்த் தங்கவிட்டார். காதல், தோள்வீரத்தைக் கரும்புமணம் புரிந்தகதை ஏட்டில்தான் பார்க்கின்றோம்; படிக்கின்றோம்; என்செய்வோம்? நாட்டின் நிலைவேறாய் நாமிருக்கப் பார்க்கின்றோம்! தொல்லை மிகக்கொடுத்துத் தொட்டிலில்போட் டாட்டென்றே பிள்ளை அடம்பிடிக்கப் பெற்றெடுத்த தாய்மார்கள் பேயென்றும் பிசாசென்றும் பெரிதும் பயமுறுத்தின் நாயென்றால் கூடப்பின் நடுங்காதோ, கூறுங்கள்! சீவி முடித்துத்தன் சின்னஞ் சிறுமகனை, ஆவி கொடுத்திடநீ" அமர்க்களம்போய் வா, வென்ற பெண்எங்கே போய்மறைந்தாள்? பிறந்திங்கே மறுபடியும் கண்முன்னே வந்தாலும் கால்கொள்ளும் மாவீரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/21&oldid=883015" இலிருந்து மீள்விக்கப்பட்டது