பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் & 22 இவளன்றோ வீரமகள்! இவளன்றோ புரட்சிப்பெண் இவளன்றோ இளங்கோவை இயக்கிவைத்த பெண்தெய்வம்! பெண்ணுக்குக் கற்பும் பிழையறியாச் சான்றோர்க்குக் கண்ணுக் கிணையாய்க் கருதும்தன் மானமும்தான் வீரம் என் கின்ற விதிவகுத்தும் திணைவகுத்தும் யாரும் வியக்கும் இலக்கணங்கள் செய்தவர்யார்? மறம் என்ற மங்கை மடியில் துயிலுமோர் அறம்என்ற அருட்குழவிக்(கு) ஆராரோ இசைத்தவர் யார்? மரத்தின் புறமிருந்து மாவீரன் ஒருவன்மேல் கரத்தின் கணையெறிவோன் கடவுளே என்றாலும் கண்டிக்கத் தவறிப்பொய்க் காலட்சேபம் செய்தால் வெண்டைக்காய் வெட்டுவதும் வீரம்என் றாகிவிடும் பின்னர் நமதினத்தின் பீடு பறந்துவிடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/23&oldid=883019" இலிருந்து மீள்விக்கப்பட்டது