பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னர் செழித்திருந்த முறையாவும் பட்டுவிடும்; செயங்கொண்டான் சந்ததியைச் சேர்ந்தவனா இன்றைக்குப் பயங்கொண்டான் என்றுலகம் ஆச்சரியப் படக்கூடும் உண்மை இஃதுண்மை! உயிரனையீர் உள்ளத்தில் திண்மை இருந்தால்தான் வெற்றிச்சுடர் தெரியும் 'சாவா? நாம் சந்திப்போம் வாழ்க்கை நமக்கென்ன பூவா? புறப்படுவோம்; புல்லியரைத் தூள் செய்வோம்! நிலம் திருடும் இழிகுணத்தான் நீயா? ஆ. எங்கள் பலம் திருடப் பார்த்த பகையா? வா', என்றார்த்து வெள்ளையர் தம் ஆதிக்க வேகத்துக் கணைபோட்ட உள்ளம் நமக்கிருந்தால் உயர்வோம்; ஆம்! இஃதுண்மை! நாவீரத் தாசர்களாய் நாம் மாறிப் போகாமல், தீவீரம் பேசிப்பின் tரா હ. 23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/24&oldid=883021" இலிருந்து மீள்விக்கப்பட்டது