பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம் அல்லிப்பூ மணங்கமழும் அந்திப் பொழுதினிலே கல்விப்பூ மணங்கமழும் கல்லூரி மண்டபத்தில் கவிதை அரங்கமைத்த கலை உணர்வைப் போற்றுகிறேன். செவியின்பம் தேடிவந்த செல்வர்களை வணங்குகிறேன். இல்லத் தரசியார் 'இன்னொருத்தி யா?” என்று சொல்லித்தான் ஊடத் தொடங்குகின்ற வேளையிலும் கவிதை அழகியிடம் காணும்பேரின்பச் சுவைவிலக்கா முடியரசே! சொல்லரசே வணங்குகிறேன். t ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதத்தின் உரிப்பொருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/33&oldid=883042" இலிருந்து மீள்விக்கப்பட்டது