பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் & 34 மருதம் அளித்தமைக்கு மகிழ்ச்சி அடைகின்றேன் ஒருவா(று) அதன் பெருமை உரைக்கத் தொடங்குகிறேன். திணைகள் ஐந்(து) உண்டென்று தெரிந்திட்ட போதும், உயர் திணை என்றும் மருதம்தான்! மற்றதெல்லாம் அஃறிணை தான். வெள்ளி நிறங்காட்டி விரைவாக மான்போலத் துள்ளிக் குதிக்கின்ற தூய அருவியின் நீர் உற்பத்தி யாகுமிடம் உயர்குறிஞ்சி யென்றாலும் அற்புதமாய் அதுபாய்ந்தே அசையுமிடம் மருதம் தான்! முல்லை நிலப்பெண்கள் மோர்விற்க நெய்விற்கச் செல்லும் சிறந்த இடம் செழிப்பான மருதம்தான்! நித்தம்மீன் பிடித்துவந்து நெய்தற் பரதவர்கள் சத்தமிட்டு விற்கின்ற சந்தை மருதம் தான் பாவம் பரிதாபம்! பாலையிலே வாழ்வோர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/35&oldid=883045" இலிருந்து மீள்விக்கப்பட்டது