பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவையினால் களவாடத் திரியுமிடம் மருதம்தான்! எந்தத் திணையாக இருந்தாலும் மருதத்தைச் சந்திக்க விரும்பாமல் தனித்தியங்க முடியாது. மிஞ்சி ஒலிக்க மெதுவாய் நடந்துவந்து ‘கஞ்சி குடிக்கஎன்றன் காதலரே வாரும்; என அன்னம் அழைக்குங்கால் அகிலம் முழுவதற்கும் அன்னம் அளிக்க அயராத ஏருழவன் 'அந்த அமுதம் இங்(கு) ஆருக்கு வேண்டுமடி இந்த அமுதம் இருக்கையிலே' என்றுரைத்துத் தொட்டு விளையாடித் தோகை மயிலாளைக் கட்டிப் பிடிக்கின்ற காட்சி நிகழுமிடம் நெல் விளையும் மருத நிலம் தானே! பின் என்ன புல்விளையாப் பாலையிலா பொங்கிவ்ரும் புதுக்காதல்? உண்மையைப்போல் அழகாய் ஒளிரும் முகம்படைத்த மீரா & 35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/36&oldid=883047" இலிருந்து மீள்விக்கப்பட்டது