பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் & 42 விருந்தினர்கள் வந்தால் வெகுளியுடன் கொடும்.ஊடல் பிறந்து வந்து பயமுறுத்தும் பெரிதும் துயர்ப்படுத்தும்; இலக்கியத்தில் இருக்கின்ற இனிதான ஊடலினை விலக்கி வைத்து விடலாமா மருதம் கெடலாமா? குறிஞ்சிக் கவிபாடிக் கொண்டிருந்த கபிலரும்தான் நெருஞ்சியென மருதத்தை நினைத்தாரா? வெறுத்தாரா? பரணன் நக்கீரன் தென் பாண்டிப் பதிவாழ்ந்த மருதன் இளநாகன் மன்னன்கோப் பெருஞ்சோழன், இடையன் நெடுங்கீரன் மதுரை இளவேட்டன் கடுவன் இளமள்ளன், ஆலங் குடிவங்கன் அள்ளுர் நன்முல்லை, அதியன் புகழ்ஒளவை கள்மயக்கம் நடையழகில் காட்டும் இளங்கடுங்கோ இன்னும் பலபுலவர்' இனிக்க இயற்றிவைத்த மன்னும் கடைச்சங்க மருதப்பா படிக்குங்கால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/43&oldid=883060" இலிருந்து மீள்விக்கப்பட்டது