பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானி தின்னத் திகட்டாத தேமாங் கனி, மங்கை கன்னம்போல மினுமினுத்துக் காட்சிதரும் வைகாசித் திங்களிலே - அறவாழி திரு.வி.க, அரங்கினிலே பொங்கும் சுவையளிக்கும் புதுமைக் கவியரங்கம் அமைத்துப் பணியாற்றும் ஆத்தூர்த் தமிழ்ச்சங்கம் இமயம்போல் என்றும் இருக்கவென வாழ்த்துகிறேன். மன்றத் தமிழ்பாடி மணங்கமழும் தண்பொதிகைத் தென்றல் நலம்பாடித் திரைவானில் பறந்தபடி கானம்பா டித்தேமாங் கனி பாடித் தென்னகத்தின் f தென்றல் கவியரங்கத்தலைவர் கண்ணதாசன் நடத்திய கிழமை இதழ். 责 * - 够 மாங்கனி - கண்ணதாசன் பாடிய காவியம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/47&oldid=883068" இலிருந்து மீள்விக்கப்பட்டது