பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 47 மானம்பா டித்தமிழ மரபின் நெடுமாட்சி வானம்பா டிப்புதிய வாழ்க்கையினைப் பாடிவரும் வானம்பாடிக்' கவிஞ! வாழ்க! வணங்குகிறேன்! வாகை தனைச்சூட வந்த புலவீர் சொற் பாகை அருந்த வந்த பசியுடையீர்! வணங்குகிறேன்! பள்ளியிலே அன்று படிக்குங்கால் ஆசிரியர் அள்ளிக் கொடுத்த அறிவியல் நூற் கருத்துக்கள் ஒன்றும் இதயத்தில் ஒட்டாமல் போனதால் இன்று பொழுதெல்லாம் இலக்கியத்துக் கடல் மூழ்கிக் களைத்தும் உடல்மெலிந்தும் கற்பனைக்(கு) உளங்கொடுத்தும் இளைத்தும் இருக்குமெனை - விஞ்ஞானி யாய்மாறி வாகை தனைச்சூட வாவென்(று) இழுத்து வந்தீர்; ஈகைக் குணமுடையீர். என்செய்வேன்.... முயல்கின்றேன்! f வானம்பாடி - கண்ணதாசன் எடுத்த திரைப்படம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/48&oldid=883069" இலிருந்து மீள்விக்கப்பட்டது