பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் & 48 உலகை உயரத்தில் உண்மையிலே தூக்கிவைக்கப் பலகை கொடுத்தவன் யார்? பகுத்தறிவை வளர்த்தவன் யார்? காற்றை அடக்கிக் கடல் மீதும் ஆணையிடும் ஆற்றல் மிகுந்தவன் யார்? ஆற்றல் மிகும் நீரைத் தேக்கி யளிக்கின்ற திட்டம் அளித்தவன் யார்? நீக்கமற எங்கும் நிறைந்துள்ள மின்வெளிச்சம் படைத்துக் கொடுத்தவன் யார்? பாருலகச் செய்திகளைத் தொடுத் தெளிதாய் அச்சாக்கும் தொழில் கற்றுத் தந்தவன் யார்? அழகற்றோர் கூட அலங்காரம் பண்ணித்தம் நிழற்படத்தைக் காணும் நிலைவகுத்துத் தந்தவன் யார்? காலைச்சிற் றுண்டியினைக் கல்கத்தாவில் முடித்து மாலை விருந்துக்கு மதுரை வரவைத்தவன் யார்? அமெரிக்க நாட்டில் ஒர் அறிவாளி பேசுவதைக் குமரிக் கரையிருப்போர் செவிகுளிரக் கேட்டிருக்கச் செய்தவன்யார்? வேண்டுங்கால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/49&oldid=883071" இலிருந்து மீள்விக்கப்பட்டது