இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மீரா 56
நாடுகின்றார்; வளர்கின்றார்.
நாமோஉட் பூசலினால்
வாடுகிறோம்: வீணான
வளர்ச்சியினால் வதங்குகிறோம்!
விஞ்ஞானம் கண்டவரோ
விண்ஞானங்[1] காண்கிறார்;
மெய்ஞ்ஞானம் பேசும்நாம்
மெய்யையும்பொய் என்கின்றோம்
கையில் கிடைத்த
கனியைச் சிவபெருமான்
வையகத்தைச் சுற்றிமுந்தி
வரும்பிள்ளைக் களிப்பதுவாய்ச்
சொன்னார்; பின் சுற்றிவந்த
வேலவனுக் களிக்காமல்
தன்னைமெல்லச் சுற்றிவந்த
தனயனுக்குத் தான் அளித்தார்
என்ற கிழக்கதைகள்
இயம்பும்வரை விஞ்ஞானம்
வென்று தலைதூக்கி
விளங்கமுடி யாதிங்கே!
கொடிக்கும் சிறுசெடிக்கும்
கூடஉயி ருண்டென்று
தொடக்கக்கா லத்தில்நம்
தொல்காப்பி யன்உரைத்தான்.
- ↑ விண்ஞானம் - Space Science