பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 65 பேறு கிடைத்தமைக்குப் பெருமைப் படுகின்றேன்; மாறுபடு மனமறியேன், மகிழ்ந்துன்னை வணங்குகிறேன் எண்ணச் சிகரத்தில் இலச்சினையைப் பொறிக்கின்ற அண்ணன் முடியரசன்' அவர்கட்கும் - மன்றத்தின் காவலர்க்கும்-கா வளர்க்கும் கவின்மலராய்க் கவிநல்கும் பாவலர்க்கும்-பா வளர்க்கும் பண்பினர்க்கும் என்.வணக்கம். முக்கால மும்,உணர்ந்த முனிவனல்லன், மூன்றைப்பின் எக்கார ணத்தாலே எனக்குக் கொடுத்தாரோ? முந்நீர் கடந்திட்ட மூன்றெழுத்துக் குலத்தோன்றல் தன்பெயரை அப்படியே தாங்கி இருக்கின்ற f கவியரங்கத் தலைவர் முடியரசன். "முந்நீர்-கடல் ஆற்றுநீர் ஊற்றுநீர் மழைநீர்கொண்டகடல் என்றும் படைத்தல் அழித்தல் காத்தலாகிய முச்செய்கை கொண்ட கடல் என்றும் தமிழகத்தின் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய முத்திசையிலும் நீர் சூழ்ந்த கடல் என்றும் முப்பொருள் கூறுவர். - 'சோழன், இராசேந்திரன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/66&oldid=883106" இலிருந்து மீள்விக்கப்பட்டது