பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 73 மூன்றாம் உலகப்போர் மூளக்கூடாதென்போர் சான்றோர்; துயரச் சரித்திரத்தைக் கற்றுணர்ந்தோர் வேண்டும் அடியார்க்கு விரும்பி வரமளிக்கும் ஆண்டவனார் மூவரென்றும் அவர்தொழில்கள் மூன்றென்றும் திரிபுரத்தை எரித்துப் பின் மருமகனை யும்எரித்த விரிசடைக் கடவுளுக்கு விழிகள்மூன்றுண்டென்றும் தேவர் உலகத்தில் தேனின்பம் கொடுக்கின்ற தேவியர்கள் மூவரென்றும் சீர்காழிக் குளக்கரையில் அம்மை முலைப்பால் அருந்திப்பண்பாடுங்கால் சம்பந்தர் வயது சரியாக மூன்றென்றும் புகலும் கதைகளிலும் புராணத்தி லும்மூன்(று) அகப்பட்டு விழிக்கிறதே....! அன்பர்களே இன்னும்நான் மூன்றுபற்றி அதிகம் மொழிந்தாற்பின் இவ்விடத்தில் மூன்றுபேரைக்கூடக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/74&oldid=883123" இலிருந்து மீள்விக்கப்பட்டது