பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 77 'கொண்டுவிற்றுப் பெரும்பொருளைக் கொண்டுவந்த குலவழியோர் மண்டி யிருக்கும்.இம் மன்றத்தில் அடியேன்நான் பொருள்செய்யும் வகைபற்றிப் புகுந்துரைத்தால் என்னையொரு பொருளாய் மதிப்பாரோ? போற்றிப் புகழ்வாரோ? உலைக்கொல்லன் தெருவினிலே ஊசிவிற்க வந்தவனின் நிலைஎன்றன் நிலையென்று நினைப்பாரோ? சரியான பித்தையா....! எனச்சிரிப்பாய்ப் பேசுவரோ? என் அன்பர் முத்தையா எனைத்திக்கு முக்காட வைத்தாரோ? சூழ்வறுமைச் சிறைவிட்டுச் சுதந்திரத்தை அனுபவிக்க வாழ்க்கையிலே பொருள்செய்யும் வகையறியேன் என்றாலும் வள்ளுவரின் வாய்மொழிக்கு வகுப்பறையில் நாள்தோறும் உள்ளபடி பொருள்செய்யும் ஒருவன் நான் என்பதனால் பொருள்செய்யும் வகைப்பற்றிப் புனைந்துகவி பாடுவதில் f முத்தையா - குறட்கழகச்செயலாளர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/78&oldid=883131" இலிருந்து மீள்விக்கப்பட்டது