பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் & 0ே எண்ணற்ற காலம் இனிதாய் உயிர்வாழ்வேன்; பசியா வரமளிக்கும் பாவை.உன் இதழ்கவைத்தால் பசியா வரும்?' என்று பலவாறு புகழ்வதெல்லாம் பொய்யாய்க் கனவாய்ப் பழங்கதையாய்ப் போய்விடுமே, கையில் பொருளில்ல்ாக் கதிமட்டும் நேர்ந்துவிட்டால்! வாய்மொழியால் அமுதத்தை வார்ப்பவளின் மொழிவேப்பங் காய்மொழியாய் மாறும்; கசப்புச் சுவைeறும். தாரம் சுமையாகத் தான்தோன்று வாள், பொருளா தாரம் சுவையாகத் தான் உயர வில்லையென்றால்! விரித்துவைத்த கதிர்மணியை விழுங்கவரும் கோழிகளை விரட்டுதற்குக் குழைகழற்றி வீசி எறிந்தாராம் அந்நாள் மகளிரெல்லாம்; அச்செல்வச் சிறப்பெங்கே? இந்நாளில் கழற்றுகிறார் ாதற்கென்றால் அடகுவைக்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/81&oldid=883139" இலிருந்து மீள்விக்கப்பட்டது