இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
செப்புகின்றார் இன்றுசிலர் செய்க பொருளை என்ற திருக்குறளை எண்ணாமல் செய்கின்றார் பொருளைத்தான் சீர்கெட்ட வழியினிலே! கள்ளப் பணமடித்துக் கம்பிகளை எண்ணுகின்றார். வள்ளுவனார் பொருள்செய்ய வகுத்த வழி நியாயவழி. அரிசி யிலேகல்லும் ஆவின்பா லில் நீரும் சரிபாதி கலந்துபொருள் திரட்டுவதோ திருட்டுவழி; மானபங்கம் பார்க்காமல் மதிமறந்து வருபவர்க்(கு) ஈனஉடல் தந்துபொருள் ஈட்டுவதோ இருட்டுவழி! நொடிப்பொழுதில் ஒன்றைத்தான் நூறாக்க வேண்டுமெனத் துடித்துச் சூ தாடுவதோ தூய்மையற்ற சறுக்குவழி ஒரிசாக் குலுக்கலிலே ஒருலட்சம் ரூபாயைப் மீரா & &;