பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறு ஆற்றங் கரையில் அமைந்திருக்கும் கலைக்கோயில் ஏற்றம் பெறுகவே! என்றும் வளர்கவே! இந்தக் கலைக்கோயில் இருந்து தமிழ்வளர்க்கும் சிந்தைக்கு இனியர் சிதம்பரனார்க் கென்வணக்கம்! தண்மை சலிப்பில்லாத் தன்மை தடையுடைக்கும் வன்மைகொண் டுலகத்தை வாழ்விக்கும் நீரைப்போல் அமையும் கவிதைகள் அளிக்கும் முடியரசேல் 'இமையும் விழியும்போல் யானும் என் தமிழும்’ என்(று) இடியேறு போல்முழங்கும் இளைஞர்காள்! வெற்றிப் படியேறும் கலைவகைகள் பயில்பவரே என்.வணக்கம்

  1. தியாகராசர் கலைக்கல்லூரி;

女 ● 岭 - 娜 - டாக்டர், அ. சிதம்பரநாதனார் - கல்லூரி முதல்வர். § முடியரசன் - கவியரங்கத் தலைவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/89&oldid=883154" இலிருந்து மீள்விக்கப்பட்டது