பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 29,

தான் இருப்பாங்க. சண்பகத்தைக் கட்டிக் குடுத்திட்டா எல்லாம் சரியாய்ப் போயிடும்’-என்று அம்மாவுக்குப் பதில் சொல்லி விட்டார் அப்பா. நீங்கதான் எப்படியாவது இதைத் தடுக்கணும்' என்பதாகத் திருமலையிடம் வந்து இரகசியமாகவும், அந்தரங்கமாகவும் மன்றாடியிருந்தாள் சண்பகம். திருமலைக்கே அவளிடம் அந்தரங்கமாக ஒர் ஆசை உண்டு. அவளுக்கும் அவன் மேல் அப்படி ஒர் ஆவல் இருக்கும் என்று தெரிகிறது. ஆனால் அதெல்லாம் நடை முறையில் ஒரு சிறிதும் சாத்தியமல்லாத காரியம் என்று இருவருமே பயந்தனர். பண்டாரத்தைப் போல் பழைமை யில் ஊறிய ஜாதிக் கட்டுப்பாட்டில் தீவிரப் பிடிப்புள்ள ஒருவர் இதற்கெல்லாம் செவி சாய்க்கவே மாட்டார் என்று இருவருமே அறிந்திருந்தனர். நேரடியாக அப்படி வந்து சொல்லாவிட்டாலும், சண்பகம் இதைத் தன்னிடம் தேடி வந்து முறையிட்டதில் 'எல்லாவற்றுக்கும் துணிந்த ஓர் இயக்கத்தில் இருக்கிறீர்களே, என்னை எங்காவது இழுத் துக் கொண்டு ஒடியாவது காப்பாற்றுங்களேன்" -என்பது போல் ஓர் உட்குறிப்பு இருக்கவே செய்தது. அவை ஒன்றும் தனக்குப் புரியாததுபோல் திருமலை பாமரனாக நடிக்க முயன்றான் என்றே சொல்ல வேண்டும். அவனுக் குத் தன்மேல் இருக்கும் எல்லையற்ற பிரியத்தை-ஊமைப் பிரியத்தை அவள் அறிவாள். அதேபோல் தன்மேல் அவளுக்கு இருக்கும் ஊமைப் பி ரி ய த் ைத அவனும் அறிவான். ஒருவேளை இப்படிச் சொல்லவும் தெரியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கும் ஊமைப் பிரியங்களைத் தான் உலகில் காதல் என்று பெரியதாகப் பெயர் சூட்டிக் கொண்டாடுகிறார்களோ என்னவோ? x நந்தவனத்தில் தலைமறைவு வாசம் செய்தபோது அணு அனுவாகப் பார்த்து ரசித்த அவளுடைய அழகு களையும், அசைவுகளையும் பண்டாரம் யாரோ ஒரு புதிய வனுக்குச் சொந்தமாக்கப் போகிறார் என்று நினைப்ப தற்கே திருமலைக்கு எரிச்சலாயிருந்தது. இந்த விவகாரத்