42
மூவரை வென்றான்/பெரிய...
விரலை வைக்க நேரிடலாம்! எல்லாம் நாளை இரவு மூன்றாம் ஜாமம் முடிவதற்குள் அம்பலமாகி விடும். நம்முடைய திட்டத்தில் மிக முக்கியமான அம்சம் பெரிய மாயனையும் அவன் கோஷ்டியாரையும் மொத்தமாகப் பிடித்துவிட வேண்டுமென்பது- ஆனால் தீவட்டிக் கொள்ளைக்காரர்களோ வாயு வேகத்தில் செல்லவல்ல குதிரைகளில் வந்து போகிறார்கள். நம் கையில் அவர்கள் சிக்க வேண்டுமானால் அதற்கு மிக நுணுக்கமானதோர். தந்திர்த்தை நாம் கையாள வேண்டும்.
“என்ன தந்திரம்? அதை முதலில் சொல்லுங்கள். எப்படி யும் செய்தே தீருவோம்!” -கேட்டுக் கொண்டிருந்தவர்கள் குறுக்கிட்டனர்.
“பிரமாதமாக ஒன்றும் இல்லை! நாளை உச்சி. வேளைக்குள் முப்பது கலம் கேழ்வரகும், முந்நூறு ஒலைப் பாய்களும் தயார் செய்து வைக்க வேண்டும். கேழ்வரகும், நன்கு காய்ந்த தானியமாகவும் ஒலைப் பாய்கள் சன்னமாக மழ மழவென்று கரடுமுரடில்லாமல் பின்னப்பட்டனவாகவும் இருக்கவேண்டும்”-தேவர் இப்படிக் கூறியவுடன் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் சிரிப்பை அடக்கமுடியாமல் வாய்விட்டுச் சிரித்துவிட்டனர்.
“கேழ்வரகும் ஒலைப் பாயுமா? இதென்னி வேடிக்கையாக இருக்கிறது! தீவட்டிக் கொள்ளைக்காரர்களைப் பிடிக்கக் கேழ்வரகும் ஒலைப் பாயும் எதற்கு?”
“வேண்டும் என்றால் வேண்டும். நான் வயதானவன்; அனுபவஸ்தன். என்னை நம்புவதாக இருந்தால் நான் சொல்லுகிறபடி கேளுங்கள். காரணமில்லாமல், பயனில்லாமல் எனக்கு எதையும் சொல்லத் தெரியாது.”
“சரி! அதற்கென்ன? ஒலைப் பாய்க்கும் கேழ்வரகுக்குமா நம் ஊரில் பஞ்சம்? நீங்கள் சொல்கிறபடியே தயார் செய்து விடுகிறோம். மேலே சொல்லுங்கள்”- அவர்கள் அவர் வேண்டுகோளுக்கு இணங்கியபின் மேலும் அவர் தமது திட்டங்களைத் தொடர்ந்து கூறுவதற்குத் தொடங்கினார்.