இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை
பழைய சோறும் ஊறுகாயும் சாப்பிட்டு வாழ்ந்த அந்தக் காலத்தில் தமிழ் நாட்டுச் சிற்றுார்களில் வீரம் விளைத்த திர ஆடவர்கள் பலர் வாழ்ந்தனர். உடல் வன்மையும், அறிவு வன்மையும் மிக்க அத்தகைய தீரர்களைப் பாத்திரங்களாகக் கொண்டு விறு விறுப்பான சம்பவங்களோடு பின்னப்பட்ட ஐந்து நெடுங்கதைகளைக் கொண்ட தாகும் இந் நூல்.
இதிலுள்ள கதைகள் ஏற்கனவே தமிழ் நாட்டின் சிறந்த இதழ்களில் வெளியானவை. இவற்றினை வெளியிட்டுக்கொள்ள இசைந்த ஆசிரியர்களுக்கு என் நன்றி.
நா. பார்த்தசாரதி