பக்கம்:மூவரை வென்றான்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

7


நகரத்துப் பாணியில் வெளிவந்த பேச்சுக்கும் மரியாதை - கொடுக்க எண்ணினார் போலும் அந்தப் பெரியவர். எனக்கு வேண்டிய விஷயமோ அவருடைய பதிலில் இருந்தது.

“சாமி அது ஒரு பழைய கதைங்க... பொழுதிருந்தா இங்கனே குந்திக் கேளுங்க, சொல்றேன்.”

சந்தோஷம் பெரியவரே. அதைத் தெரிந்துகொள்ள் வேண்டும் என்றுதானே நான் இங்கே வந்தேன். சொல்லுங்கள் கேட்கிறேன்.”

ஆவலோடு கடை வாசலில் போட்டிருந்த நீளமான பெஞ்சை மேல் துண்டால் தட்டிவிட்டு உட்கார்ந்தேன் நான்.

“அதுக்கென்னங்க? தாராளமாய்ச் சொல்றேன்... வெத்திலை, பாக்கு, பொவையிலை, சோடா ஏதாச்சும் வேணுமுங்களா?”

பெரியவர் கதையை இனாமாகச் சொல்ல விரும்பவில்லை என்று குறிப்பாகத் தெரிந்துகொண்டேன். எனக்கிருந்த ஆத்திரத்தில் எப்படியாவது கதை வந்தால் போதுமென்றிருந்தது.

“எல்லாம் கொடுங்கள்! பெரியவரே!” என்று ஒரு முழு எட்டனாவை எடுத்து நீட்டினேன். பெரியவர் என்னை ஒரு தினுசாக வியப்புத் தோன்றப் பார்த்தார். வெற்றின்ல், பாக்கு, புகையிலை, ஸோடா எல்லாம் பெஞ்சியில் எடுத்து வைத்தார். நான் ஸோடாவை மட்டும் குடித்தேன்.

கதை கேட்கத் தயாராகிற பாவனையாகப் பெஞ்சியில் சப்பணங்கூட்டி நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டேன். “சகோதர சகோதரிகளே!” என்று கூறிப் பேச்சு ஆரம்பிப்பதற்கு முன்னால் மேடைப் பேச்சாளர் கனைத்துக் கொள்ளுவார் பாருங்கள், அந்த மாதிரி ஒரு கனைப்புக் கனைத்துவிட்டுப் பெரியவர் கூறத் தொடங்கினார்.

அவருடைய தமிழ் மிகவும் கிராமியமாக இருப்பதால் இலக்கண சுத்தமான நடையில் மாற்றி உங்களுக்கு அதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/9&oldid=505344" இலிருந்து மீள்விக்கப்பட்டது