பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (1) திருஞானசம்பந்தர் 45 இந்நிலையில் திருமறைக்காட்டில் திருமடத்தில் தங்கி யிருந்த காழிப்பிள்ளையார் நாவுக்கரசரைக் காணாமல் 'அவர் திருவாய் மூருக்கு ஏகினார்' என்று அடியார்கள் மூலம் அறிந்து அவரைத் தேடிக்கொண்டு திருவாய்மூரை நாடுகின்றார். வழி யிடையே தம்மை இட்டுப்போந்த இறைவனைக் காணாது வருத்தமுற்ற நாவுக்கரசர் தம்மைத் தேடிவரும் ஞானக்கன்றைக் கண்டு மகிழ்கின்றார். 'திருவருட் குறிப்பினையறியாது கத வினைத் திறக்க முற்பட்ட என்னைப் போலன்றி தொண்டின் நிலைமை நன்கு செறியப் பாடி அடைப்பித்த ஞானக்கன்று இதோ வந்து நிற்கின்றார்; வாய்மூர்ப் பெருமான் என்னையன்றி இவ ரையும் மறைந்து நிற்க வல்லரோ?' என்று வினவும் முறையில், திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ் உறைப்புப் பாடி அடைப்பித்தார் உந்நின்றார் மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப் பிழைகொள் செஞ்சடை யாரிவர் பித்தரே' என்ற திருக்குறுந்தொகையைப் பாடிப் போற்றுகின்றார். அப் போது வாய்மூர் அடிகள் பிள்ளையாருக்கு எதிரில் தோன்றி ஆடல்காட்டி அருள்புரிகின்றார்." பிள்ளையார் தாம் கண்ட அற்புதத் தெய்வக் காட்சியைத் தளரிளவளரென (2.111) என்ற பதிகத்தால் போற்றித் தாம் கண்ட காட்சியை நாவேந்தருக்குக் காட்டி மகிழ்கின்றார். தளரிள வளரென வுமைபாடத் தாளமிடவோர் கழல்வீசிக் கிளரிள மணியா வரையார்த் தாடும்வேடக் கிறிமையார் 28. அப்பர் தேவா.5.50:8 29. வைணவத்தில் இறைவன் ஆழ்வார்கட்கு நேர்காட்சி தந்ததாகக் குறிப்பு இல்லை; மானசிகக் காட்சி (நம்மாழ்வாருக்கு) தந்ததாகவே குறிப்பு உண்டு.