பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெழுகுச் சிறகுகள் 49 சிறைதப்பி ஒர்நாள்தான் இந்தத் தீயோன் சீறுகின்ற புயல்இருட்டில் கடலின் ஒரம் மறைவதற்கே முயன்றிடுவான் ஆனால் அந்தோ மச்சவிஷ முள்குத்தி மரணம் எய்வானர்! இத்தகைய மாபாவி கொடியோ னுக்கும் இறப்புக்குப் பின்னாலே சிறிதே யோகம் மெத்தபுகழ் ஆன்றோனால் ஒர்நாள் கிடைக்கும் விளக்குநெய் கோவிலுக்குத் தந்த தாலே!' கபாலத்தில் வரைந்திருந்த பிரம்ம கிரந்தக் கதைஇதுதான்! மும்முறைகள் மீண்டும்.மீண்டும் அபாரக் கவனத்துடனே படித்த முனிவன் ஆச்சரியத் திகைப்புக்குள் ஆழ்ந்து விட்டான்! பட்டென்றே நாரதனின் மூளைக்குள்ளே பளிச்சிட்ட விஷமத்தின் ரேகை மின்ன சட்டென்றே அம்மண்டை ஓடுதன்னைத் தன்கையில் பத்திரிமாய் ஏந்திக்கொண்டான்!