பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 மெழுகுச் சிறகுகள் 59 தருணமே உன்னை நினைத்துக் கொள்வார்! ஆனால் எனக்கோஅதிசய அலுவல்கள்! ஆயிரம் பணிகள்! கடித்த உதட்டின் எச்சிலில் இருப்பேன்! காலிக்கோப்பையில் கள்ளாய் ஊறுவேன்! மதுவகை களாக அவதாரம் எடுப்பேன்! 'படித்தவன் கண்ணிர் வடிக்கும் போது பார்த்துப் பார்த்துப் பரிகாசம் செய்வேன்! 'கெடுத்தவன்” வீட்டுக் குப்பை மேட்டிலும் சதங்கையைக் குலுக்கி சதிர்கள் ஆடுவேன்! ஊமை வாயையும் ஒலிமுர சாக்குவேன்! சாமான் யனையும் தங்கக் கட்டிலில்