பக்கம்:மேனகா 1.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

மேனகா

கற்பித்து, பக்குவமான பிறகு, அவள் நினைத்த புருஷனோடு அலையும்படி விட்டுவிட்டால் உலகம் அழகாயிருக்கும் அல்லவா? வாலறு பட்ட ஒரு நரியின் பேச்சைக் கேட்டு எல்லா நரிகளும் வாலை அறுத்துக் கொண்டதைப் போலாகும். கேடுகாலம் நெருங்கிவிட்டது. இருபது முப்பது வருஷங்களுக்கு முன்னிருந்த கிழவர்கள் யாவரும் நூறு வயது, தொண்ணுறு வயதிற்குக் குறையாமல் திட சரீரங்களோடு இருந்தவர்கள். அதன் காரணம் என்ன? ஸ்திரீகளின் விஷயத்தில் நம்மவர் அனுஷ்டித்த கட்டுப்பாடே காரணம்; முன்னவரில் புருஷர் முப்பது, முப்பத்தைந்து வயதிற்கே மணந்தனர், சிங்கக்குட்டிகளைப் போன்ற குழந்தைகளை ஈன்றனர். இப்போது புருஷர் பதினைந்து வயதிற்கே மனதில் பெண்ணாசை கொண்டு உருகி உருக்குலைந்து போகின்றனர். காரணம் என்ன? அன்னிய நாட்டாரின் பழக்கமே இதற்கு முக்கிய காரணமாகிறது, அவர்களுடைய ஸ்திரீகளும் புருஷரும் கலியாணமாகா மடந்தையரும், அவர்களை மணக்க நினைக்கும் காதலரும் ஜோடி ஜோடியாகச் சேர்ந்து தனிமையில் அலைந்து, பிறமனிதர் இருப்பதைப் பற்றி சிறிதும் லஜ்ஜைப் படாமல் கட்டி முத்தமிட்டு அணைத்துச் சரச சல்லாபம் செய்தலை நம் சிறுவர் காணில், அவர் சும்மா இருப்பாரோ? குழந்தைகள், சிறுவர் முதலியோர் எப்போதும் பிறர் செய்வதைப்போலச் செய்ய விரும்புதலே சுபாவமாக உடையவர்; இந்தப் பொல்லா உதாரணம் தொற்று வியாதியைப் போலப் பரவி வருதலே முதற் காரணமாகிறது. பிற பாஷைகளில் உள்ளவையும், நம் பாஷைகளில் மொழி பெயர்த்துள்ளவையுமான காதலர் காதலியரின் கதைகளை நம் சிறுவர் வரம்பின்றிப் படித்தல் இன்னொரு முகாந்திரமாகிறது; நாடக மேடைகளில் கூத்தாடிகள் கேட்பாரின்றி செய்து காட்டும் அசங்கியங்களை நம் சிறுவர் பார்ப்பது மூன்றாவது காரணமாகும். அவற்றால் பிஞ்சுப்பருவத்திலேயே பெண் மோகம் கொண்டு சிறுவர் பழுத்துப் போகின்றனர். தவிர, ஏராளமான சிறுவர் படிப்பின் பொருட்டும், உத்தியோகத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/216&oldid=1250844" இலிருந்து மீள்விக்கப்பட்டது