பாலுக்குங் காவல் பூனைக்குந் தோழன்
223
“அப்படியா? கடிதம் ஒன்றும் கொடுக்க வில்லையா?” என்றார் சாம்பசிவம்.
சேவ: - இல்லை எசமான்!
சாம்ப:- வேறொன்றும் சொல்லவில்லையா ?
சேவ:- பட்டணம் போவலாம்; சரிப்பட்டா, எசமான் ரயிலுக்குப் போறத்துக்கு முன்னாலே, அவுங்க வந்து பார்க்கிறேன்னு சொன்னாங்க, அவ்வளவுதான்.
சாம்ப:- அப்படியானால் சரி; நீ போ - என்றார்.
உடனே சேவகன் வெளியில் வந்து "செத்தேன் பிழைத்தே” னென்று ஒட்டம் பிடித்து இரண்டு நிமிஷங்களில் தாசில்தார் வீட்டிற்குள் நுழைந்து அவருக்கெதிரில் வந்து நின்றான்.
தாசில் :- ஏனடா சொன்னா யா ?
சேவ :- சொல்லிட்டேன்.
தாசில் :- என்ன சொன்னார்?
சேவ:- ஒண்ணும் சொல்லல்லீங்க, சரிதான் போன்னாங்க; வந்துட்டேன்.
தாசில் :- சேவகப் பக்கிரி எங்கே?
சேவ :- டிப்டி கலெக்டரு ஊட்டு வாசல்லே ரெங்கராசுக்கிட்ட ஒக்காரவச்சிட்டு வந்திருக்கிறேன்.
தாசில் :- சரி; அவன் வந்தவுடன் உள்ளே அழைத்துவா, எங்கேயும் போய்விடாதே - என்று சொல்லி அவனை வாசல் திண்ணைக்கு அனுப்பினார்.
மாலை ஆறுமணி சமயமானது; சேவகப் பக்கிரி புன்னகை செய்தவனாய் உள்ளே வந்தான்.