பக்கம்:மேனகா 2.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்டு முதல்

331

மகிழ்வடைந்தேன். நான் இதுவரையில் எத்தனையோ புஸ்தகங்களில் கதைகள் படித்திருக்கிறேன்; அநுபவத்திலும் எத்தனையோ ஸ்திரீகளைக் கண்டிருக்கிறேன். ஆனால், உன்னுடைய நற்குணத்தைப் பெற்றிருந்த பெண்களை நான் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை” என்று மேனகா முதல் வாக்கியத்தைப் படித்தாள். அதைக் கேட்ட வராகசாமி கரை கடந்த மகிழ்வடைந்து, “ஆம்! உண்மையான விஷயம்” என்று கூறி மேனகாவின் கன்னத்தில் ஆசையோடு முத்தமிட்டு மேலே படிக்கும்படி துண்டினான். மேனகா மேலும் படிக்கிறாள், “என்றாலும், நானும் என்னுடைய தகப்பனாரும் செய்த அற்ப உதவியை மலையாக வளர்த்து, அதைப் பெரிதும் பாராட்டி நீ எழுதியிருப்பது என் மனதிற்கு நிரம்பவும் கஷ்டமாக இருந்தது; இனிமேல் அந்த விஷயத்தைப் பற்றி எழுதாமலிருக்கக் கோருகிறேன்.

இன்னொரு முக்கியமான விஷயத்தை உனக்குத் தெரிவிக்க நான் விரும்புகிறேன். போலீஸ் இன்ஸ்பெக்டர் சஞ்சீவி ஐயரென்பவர் செய்த சில அருமையான தந்திரங்களினால் என்னுடைய புருஷர் தமது பழைய நினைவுகளை யெல்லாம் சுத்தமாக விடுத்து இப்போது புதிய மனிதராக மாறிவிட்டார். அவர் இப்போது என்னிடத்தில் உண்மையான அன்பையும், காதலையும் கொண்டு நற்குணப் புருஷராக ஒழுகி வருகிறார். நாங்கள் இருவரும் திரும்பவும் சந்தோஷமாக காலம் கழித்து வருகிறோம். ஆண்டவன் அருளால் இனி எப்போதும் நாங்கள் இப்படியே இருப்போமென்று நிச்சயமாக நான் நினைக்கிறேன்; நேற்றிரவு என்னுடைய தகப்பனாரின் பங்களாவுக்கு நான் போயிருந்தேன். அப்போது உங்களுடைய யோகக்ஷேமங் களைக் கேட்டு என் தகப்பனார் மிகவும் ஆநந்த மடைந்தார்; உன்னுடைய புருஷனுக்குத் திடீரென்று தானாக சப் ஜட்ஜி உத்தியோகம் ஆனதாகவும், அது யாருடைய சிபார்சினால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/332&oldid=1252784" இலிருந்து மீள்விக்கப்பட்டது