பக்கம்:மேரியின் திருமகன்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29


பெரிய கட்டளை

போதகரே திருச்சட்டத்தின் பெரியகட்டளை யாதென்றார்
ஆண்டவருக்கு முழு உள்ளத்தோடும் ஆன்மாவோடும்
முழு மனத்தோடும் அன்பு செய்க என்பதே.
கட்டளைகளில் பெரிய கட்டளை என்றார்
அடுத்து உன்மீது நீ அன்புகொண்டிருப்பது போல்
உன் அயலவன் மீதும் அன்பு செய்வாயாக
என்பதே திருச்சட்டம் இறைவாக்குகட்கு அச்சாணி
மோயீசன் இருக்கையில் இருக்கின்ற பரிசேயரோ
விளம்பரத்துக்கென்றே வேதம் படிப்பார்.
விருந்துகளில் முதலிடம் தேடுவார்
உதட்டினால் பேசுவார். உள்ளம் தொலைவிலிருக்கும்
மக்களின் வணக்கத்தை பெற விரும்புவார்
தன்னை உயர்த்துவார். பிறரைத் தாழ்த்துவார்
வெளிவேடக்கார பரிசேயருக்கு ஐயோ கேடு
கொசுவை வடிகட்டி ஒட்டகத்தை விழுங்கும்
குருட்டு வழி காட்டிகளுக்கு ஐயோ கேடு
தாளத்தை கிண்ணத்தை வெளியில் கழுவுவார்
உள்ளே கொள்ளையுணர்வு குடிகொண்டிருக்கும்
வெள்ளை அடித்த கல்லறைக்கு ஒப்பாவார்.
பகட்டில் மறைநூல் அறிஞர் என்பார்
மனதில் கள்ளமும் கேடும் நிறைந்திருக்கும்