பக்கம்:மேரியின் திருமகன்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

இறைமகன் இரக்கப் பட்டார்
சீர்கெட்ட தலைமுறையே எதுவரை நானிருப்பேன்
என்பால் அவனைக் கொண்டு வருக
என்றார்
ஆண்டவர் காட்சியால் அவன் பேயகன்றது
தங்களால் முடியாமைக்கு சீடர் வருந்தினர்
உங்கள் விசுவாசம் உறுதியாக இருந்தால்
மலையும் நகரும் மரமும் இடம்பெயரும்
செபத்தினால் ஆகாதது ஒன்றுமில்லை என்றார்
ஏசு சீடர்களிடம், மக்கள் தன்னை
யாரென்று சொல்லுகின்றார் எனக் கேட்டார்
ஸ்நாபக அருளப்பர் எலியாஸ் எரேமியாஸ்
இறைவாக்கினரில் ஒருவர் என்கின்றார் என்றனர்.
நீங்கள் என்னை யாரென்று சொல்லுகின்றீர்
என்றதற்கு ராயப்பர் நீரே மெசியா
உயிருள்ள கடவுளின் மகன் என்றார்.
சீமோனே நீ பேறுபெற்றவன் இன்றுமுதல்
உன்பெயர் ராயப்பன் என வழங்கப்படும்
என் திருச்சபையை உன்மீது நிறுவுவேன்
வானகத் திறவுகோலைத் தருகிறேன்
என்றார்.
மேலும் உரைத்தார் மனுமகன் எருசலேமில்
குருக்களால் வதைக்கப்படுவார் கொலையுண்ட
மூன்றாம்நாள் உயிர்த்தெழுவார் என்றதும்

சீடர்கள் சினந்தனர் ராயப்பர் வெகுண்டார்
ஆண்டவர், இறைவனின் கருத்தே முடிவென்றார்