36. மே தினம் காற்று வீசாதபோது வேண்டுமானால் விசிறி கொண்டு காற்றைப் பெறலாம். விசிறினால் வரும் காற்றைத் தடுக்கலாம் விசிறியை வீசி எறிவதால், ஆனால், காற்று இயற்கையாக வீசுவதைத் தடுக்க, ஏன் என்று கேட்க, எவரால் முடியும்? கணக்கற்ற காலமானாலும் தொடர்ந்து போராட்டத்தை நடத்த நெஞ்சிலே உரம் வேண்டும்; தியாகம் செய்ய திடம் வேண்டும். நெஞ்சு நினைவற் றிருக்கும்; மனம் மறந்திருக்கும், அறிவு அசட்டையாக இருக்கும் இந்த நேரத்திலே, இனப் பற்றை, இலட்சி யத்தை, குறிக்கோளைச் சற்றுத் தேடித் தடவி நினை வூட்டுகிறேன், உணர்ச்சி கொள்ளுங்கள், எழுச்சி பெறுங்கள் என்று. எண்ணிக்கை இன்று இன உணர்ச்சி, எதிர்காலத்திலே எதற்கும் சலியாத, சாயாத அளவுக்கு எழுச்சி பெற்று வளர்ந் துள்ளது. ஆம்! நமது இயக்கத்திலே 60,000 அங்கத் தினர்கள் சேர்ந்துள்ளனர். இத்தகைய பனகால், தியாகராயர், நாயர் போன்ற பெருமக்கள் காலத்திலே கூடக் கிடையாது. 'ஒரு சமயம் பனகால், ஒரு கூட்டத்திலே பேசுமிடத்து "உங்கள் நீதிக்கட்சி யில் எத்தனை அங்கத்தினர்கள் உள்ளனர்” என்று ஒரு காங்கிரஸ் தோழர் கேட்டார். அதற்குப் பனகால் கேட்க ராஜா "காங்கிரசில் எத்தனை பேர்" என்று ஒன்றரை லட்சம் என்று அவர் கூறினார். அந்த ஒன்றரை லட்சம் போக, மற்றப் பேர் ஜஸ்டிஸ் என்று பன்கால் விடை கட்சிக்காரர்தானே!" யிறுத்தார் என்று சிலர் ஏளனம் செய்தனர். அந்த நிலையில் நாம் இல்லை. நமக்குப்
பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/37
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1c/%E0%AE%AE%E0%AF%87_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%2C_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88.pdf/page37-677px-%E0%AE%AE%E0%AF%87_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%2C_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88.pdf.jpg)