சிந்துவெளி மக்கள் யாவர்?
259
நடுத்தரத்திலிருந்து அகன்ற நிலைவரை அமைந்துள்ள மூக்கு இவற்றைப் பெற்றவர்.
(6)மங்கோலிய-திராவிடர்-வங்காளத்திலும் ஒரிஸ்ஸாவிலும் இருப்பவர் அகன்ற தலை, கறுத்ததோற்றம், நடுத்தரமூக்கு உடையவர்.[1]
(1) “ஆரியர் - பஞ்சாப், காஷ்மீரம், இராஜபுதனத்தின் ஒரு பகுதி ஆகிய இவ்விடங்களில் காணப்படுகின்றனர்; (2) திராவிடர் தென்னிந்தியா முழுவதிலும் இருக்கின்றனா.: (3) மங்கோலியர் இமயமலை அடிவாரத்திலும் வடகிழக்கு எல்லைப்புறங்களிலும் இருக்கின்றனர். ஏனைய பகுதிகளில் இருப்பவர் இம்மூன்று வகுப்பினரால் உண்டான கலப்பு மக்களேயாவர்; அவர்கள் ஆரிய திராவிடர், மங்கோலிய-திராவிடர், சிதிய-திராவிடர் எனப்படுவர்.
(1) ஆரிய-திராவிடர் என்பவர் பீஹார், ஐக்கியமண்டிலங்களிலும் இராஜபுதனத்தின் ஒரு பகுதியிலும் இருக்கின்றனர்.
(2) மங்கோலிய-திராவிடர் என்பவர் ஒரிஸ்ஸா, வங்காளம், அஸ்ஸாம் ஆகிய மூன்று மண்டிலங்களிலும் இருக்கின்றனர்.
(3) சிதிய-திராவிடர் என்பவர் வடமேற்கு இந்தியா (சிந்து முதலிய பகுதிகள்), மஹாராஷ்டிர மண்டிலம், இராஜபுதனத்தின் ஒரு பகுதி ஆகிய இடங்களில் இருக்கின்றனர்...[2]
இவ்விரண்டு கூற்றுக்களாலும் ஆரியர் சிதியர் மங்கோலியர் என்பவர் பண்டை வட இந்தியத் திராவிடருடன் கலந்தனர் என்பது நன்கு விளங்கும் விளங்கவே, வடஇந்தியா முழுவதிலும் (சிந்து முதல் அஸ்ஸாம் வரை) திராவிடர் பரவி இருந்தனர் என்பது வெள்ளிடை மலைபோல் விளக்கமாதல் காண்க.