பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்ணைப் பெற்றவர் பள்ளிக்கூடத்திலிருந்து வ ந் த கோதண்டராமய்யர் தமது கோட்டைக் கழற்றி ஆணியில் மாட்டினர். உள்ளேயிருந்து வெளியே வந்த சமையலறைத் தெய்வம் அவரைப் பார்த்து , இந்த வருஷமும் சீட்டாடி நாளைக் கழித்து விடாதீர்கள். மரகதத்துக்கு எப்படியாவது, எங்கேயவாது நாலு இடம் அலேந்து வரன் பார்த்துக் கொண்டு வாருங்கள். வைகாசி மாதத்துக்குள் அவளுக்குக் கல்யாணம் நடந்தாகணும். உம் ....... நாளைக்கே புறப் படுங்கோ என்று கண்டிப்பான உத்தரவு போட்டாள். கோதண்டராமய்யர் பதில் பேசவில்லை. மனைவியின் உத்தரவுப்படி மறுதினமே டிரங்குப் பெட்டி சகிதம் மாப் பிள்ளை தேடக் கிளம்பிவிட்டார். அவருடைய நண்பர் ஆபத்சகாயமய்யர் கும்பகோணத்தில் ஒர் இடம் இருப்பதாக அடிக்கடி சொல்விக் கொண்டிருந்தார். எனவே, கோதண்ட ராமய்யர் தமது நண்பர் சொன்னபடி கும்பகோணம் போய் அவர் குறிப்பிட்ட இடத்தையும் பார்த்தார். - ஆபத்சகாயமய்யர் கொடுத்த விலாசத்தில் யாருமே இல்லை. அந்த இடத்திலிருந்தவர் திருநெல்வேலிக்குப் போய் விட்டதாகத் தகவல் தெரிந்தது. எனவே, கோதண்ட ராமய்யர் திருநெல்வேலிக்குப் போனர். திருநெல்வேலியி லும் அவர்கள் அகப்படவில்லே. அவருக்கு உத்தியோகம் மாற்றலாகிவிட்டதால் டில்லிக்குப் போய்விட்டதாகக் கேள் விப்பட்டார். கோதண்டராமய்யர் செலவைச் சிறிதும் லட்சியம் செய்யவில்லை. பெண்ணைப் பெற்றவர்கள் செலவைப் பார்த்தால் முடியுமா? டில்லியை நோக்கிப் பயணமாளுர், டில்லிக்குப் போயும் காரியம் ஆன பாடில்லை. காரணம் இவர் தேடிப் போன மனிதர் டில்லியிலிருந்து பம்பாய்க்குப் போய்விட்டது