பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வென் றிலன் என்ற போதும் - யுமா? அர்ஜுனனைத்தான். அவனுக்கென்றே உன்னை வளர்த்து வருகிறேன்” என்பார். ஆனால் அர்ஜுனனின் அழகைப்பற்றி நான் கற்பனை செய்துகொள்ளும் போதெல் லாம் உள்ளுக்குள்ளே குறுகுறுப்பும் இன்பக் கிளுகிளுப்பும் ஏற்பட்டாலுங்கூட, அப்பாவை முறியடித்து வெற்றி கண் டவர் என்னும்போது என்னையறியாமல் அவர்மீது குரோத உணர்ச்சிதான் ஏற்படும். அண்ணன் திருஷ்டதும்யுனனுக்கோ அர்ஜுனன் என் றால் பிடிக்கவே பிடிக்காது, அவனோ எப்போது பார்த் தாலும் துரியோதனனின் பராக்கிரமத்தைப் பற்றியே சொல்லிக் கொண்டிருப்பான். நான் அத்தினபுரி ராணி யா கிவிட வேண்டுமென்று அவனுக்கு ஒரே ஆசை. எனினும், அப்பா சிறு வயசிலிருந்தே விதைத்து வந்த அர்ஜுனனைப்பற்றிய எண்ணம் மனசில் உறுத்திக்கொண்டே தானிருந்தது . பாண்டவர்கள் அனைவரும் அரக்கு மாளிகையில் வெந்து மடிந்தார்கள் என்ற செய்தி எட்டி யதும், அப்பாவுக்கு இடி விழுந்தாற் போலாய்விட்டது . எனக்கோ அர்ஜுனனும் எரிந்து சாம்பலாய்ப்போனார் என் பதைக் கேட்கவே சகிக்க முடியவில்லை. அரக்கு மாளிகை, தகனச் செய்தியோடு அர்ஜுனன் மீது எனக்கிருந்த குரோத உணர்ச்சியும் வெந்து மடிந்தது. அர்ஜுனனின் மரணம் எனக்கு ஒரு பேய்க்கனலாகப்பட்டது. ஆனால் அந்தச் செய்தி, அர்ஜுனர் மறைந்தார் என்ற அழியாத உணர்ச்சி, மனசில் 'தனிமை' யைச் சிருஷ்டித்துவிட்டது. சுயம்வரம் என்று கேட்டபோது மனசில் மீண்டும் தெம்பு எழுந்தது .

  • பிடிப்புற்று, " தாவுவதற்குக் கொம்பற்றுத் தவிக்கும்

எனக்கு, சுயம்வரம் என்ற காரணத்தால் ஒரு, பற்றுக்கோடு கிடைக்காதா? என்று தான் நினைத்தேன். சுயம்வர மண்டபத்தில் வந்து நின்றபோது, அதுவும் எனக்கும் மண மகனுக்கும் இடையே வில்லையிட்ட அப்பா வின் கிருத்திருமத்தை நினைக்கும்போது, நான் கடைசி வரைக் கன்னியாகவே இருந்துவிட நேருமோ என்ற பயம் அலட்டியது. வில்லையும், லட்சியத்தையும் ஒதுக்கிவிட்டு