பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை ஆசிரியர் ரகுநாதனைத் தமிழகம் நன்கு அறியும். அவரது நாவல்களும், கதை களும், கட்டுரைகளும், கவிதைகளும் தமிழ் வாசகர்களின் மனத்தைப் பெரிதும் கவர்ந் தவை, புதுமையும் முற்போக்கும் நிறைந்த கதைகளை எழுதும் இந்த எழுத்தாளர் நம் நாட்டின் தலை சிறந்த கதாசிரியர்களில் ஒருவராகத் திகழ்கிறார். நீண்ட இடை வேளைக்குப் பிறகு இவரது , கருத்துச் செறிவுமிக்க, படிக்கப்படிக்க இன்டாம் தரும், படைப்புக்களைத் தமிழ் இலக்கிய நண்பர்களுக்கு வழங்கும் நற்பேறு எங்களுக்குக் கிட்டியதில் பெரு மகிழ்ச்சி கொள்ளுகிறோம். இவரது சிறந்த கதைகள் பன்னிரண்டு இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு தனி அழகுடன் விளங்குகிறது . ஒவ்வொன்றும் ஒவ்வொரு உண்மையை அழுத்தமாகக் கூறுகிறது. இத் தொகுதியினை முதலில் சக்தி காரியாலயத்தார் வெளியிட்டனர். நல்ல தமிழ் நூல்களை அறிமுகப்படுத்திய சக்தி காரியாலயத்தாருக்கும், ஆசிரியருக்கும் இதய பூர்வமான நன்றி கூறி, இதனை உங்கள் முன் பெருமையுடன் சமர்ப்பிக் கின்றோம், மதுரை 18. 6. '80 செ, செல்லப்பன்