பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 37 நிமிஷத்தில் போக்குதற்கு உந்தன் அறிவெல்லாம் உதவட்டும்! எழுத்தாளர் சிந்தையெலாம் மக்களுக்காய்ச் செழிக்கட்டும் ! உலகினர்முன் சொந்தத் தாய் நாட்டின் தோளுயரச் செய்யட்டும்!. பட்டினியை உண்டாக்கிப் பணம் திரட்டும் பாவியர்கள் சட்டினியாய்ப் போவதற்கு சங்காரம் ஆவதற்குக் - கொட்டு முழக்கறைந்து கூடட்டும் நாட்டுக்காய் சொட்டு .மசித்துளியும் . சொந்த உடன்பிறப்பை வெட்டவழி சொல்வோர்க்கு விஷமாகப் பாயட்டும்! கவிராயா! செப்பியதை யெல்லாம் செவிசாய்த்துக் கேட்டீரா?... அப்படியா? ரொம்பசரி, அடியேனின் திருச்சேவை எப்போதும் உம்முடைய . எழுத்துக்கு உண்டாகும் ! 1947