பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 சீர்த்தமிழர் தம் நிலத்தை, குலத்தை வெட்டிச் சிதைத்தாளல் இனிப்பொறுக்கப் போமோ? என்றே ஆர்த்தெழுந்த புதுவை மக்கள் அறப்போர் வெல்க ! ' அன்னை தமிழ்த் தாயகமே வெல்க ! வெல்க ! 3 வளமார்ந்த தாயகத்தே எங்கும் எந்த வகையாலும் போர்வெறியர் புகுந்து யுத்த தளமாக்கச் சம்மதிக்க மாட்டோம் ; எந்தம் - தமிழகத்தை அயல்நாட்டார் சுரண்டும் வேட்டைக் களமாக்கச் சம்மதியோம் ; அடிமை வாழ்வின் - கட்டெல்லாம் பட்டுவிழக் காண்போம் என்றே உளமார்ந்து படைதிரண்ட புதுவை மக்கள் உரிமைப்போர் திருமுழக்கம் வெல்க ! வெல்க! 4 1954